மும்பை

ற்போது நடந்து வரும் இங்கிலாந்து நாட்டுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இணைக்கப்படுகிறார்.

சமீபகாலமாகத் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்.  ஐபிஎல் போட்டிகளில் தனது யார்க்கர் பந்து வீச்சின் மூலம் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்த அவர் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய கிரிக்கெட் அணி பயணத்தின் போது அணியில் சேர்க்கப்பட்டார்.

அந்த அணி வெற்றி வாகை சூட நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார்.  அதன்பிறகு தற்போது இந்தியாவில் இங்கிலாந்து அணியின் பயணத்துக்கான அணியில் நடராஜன் இணைக்கப்படவில்லை.  வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழக அணியில் அவர் இருந்ததே இதற்குக் காரணமாகும்.

தற்போது இங்கிலாந்து நாட்டு அணியுடனான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட வசதியாக நடராஜனை அந்த அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ சமீபத்தில் தமிழக கிரிக்கெட் சங்கத்தை  கேட்டுக் கொண்டது.  அதற்கிணங்க அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.