நாமக்கல், பிள்ளைகளத்தூர், பாலமுருகன் கோவில்

தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவில் இருக்கும் பிள்ளைகளத்தூர் கிராமத்தில் பிரச்சினைகளை தீர்த்தருளும் பிள்ளைகளத்தூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பிள்ளைகளத்தூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக திருக்காட்சி அருள்கின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 01.07.2014-ல் நடைபெற்றது.

நாமக்கல் பிள்ளைகளத்தூர் பாலமுருகன் பங்குனி உத்திரம் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என அனைத்து முருகப்பெருமானின் திருவிழாக்களும் விமரிசையாகக் கொன்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:
மிகவும் பழமையான நாமக்கல் பிள்ளைகளத்தூர் பாலமுருகன் கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் 01.07.2014-ல் சிறப்பாக நடந்தேறியது.

தல அமைப்பு:
நாமக்கல் பிள்ளைகளத்தூர் பாலமுருகன் கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கண்கவர் பாலகனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் உட்பட தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:
பிரச்சினைகள் தீர, செல்வம் பெருக, வேண்டும் வரம் அளிக்க, வினைகள் அகல, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் கிட்ட, நோய்கள் குணமாக, கல்வி, சிறக்க, தொழில் மேம்பட, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்