வேலூர்:

ன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நளினி.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்  நளினி.

தன்னை வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்தார். புழலுக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.