.a
 
 
சென்னை:
பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துகுமார்  உடல் நலக்குறைவால்     காலமானார்.  அவருக்கு வயது 41.   திரைப்பாடல்களுக்காக  இரண்டு முறை தேசியவிருதுகள் பெற்ற முத்துகுமார், சிறந்த   கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
மரணம் குறித்து, “மரணம் பற்றிய வதந்தி” என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை.

“திருஷ்டி கழிந்தது என்றார்கள்

தீர்க்காயுசு என்றார்கள்

படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய

என் கவிதையைச் சொன்னேன்..

“இறந்துபோனதை

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்!”