டெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு எழுதும் மாணாக்கர் களுக்கு   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்,  அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு களுக்கு இடையேயும், நீட் தேர்வு இன்று பிற்பகல்  நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இந்த தேர்வை எழுத  15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,  தமிழகத்திலும் 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

நீட் தேர்வுக்கு வருகை தரும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் கோவிட் தொற்று மற்றும் வெள்ளம் காரணமாக அதை எழுத முடியாதவர்களுக்கு எனது அனுதாபங்கள்.

ஆனால், மோடி ஜி, ஜீஇ-நீட் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களைப் பற்றி அக்கறை  மோடி அக்கறை கொள்ளவில்லை, அவர் தனது நட்பு முதலாளித்துவ நண்பர்களைப் பற்றியது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.