யுக்சி

சீன நாட்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள யுக்சி கரில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மிகவும் பழமையான மசூதி உள்ளது. இங்கு உள்ள நீல நிற குவி மாடப் பகுதிகளையும், கோபுரங்களையும் இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்கச் சீன அரசு முடிவு செய்து இது தொடர்பான உத்தரவைக் கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது.

கடந்த சனிக்கிழமை, மசூதியில் உள்ள குவி மாடப் பகுதிகள் மற்றும் கோபுரங்களை இடிப்பதற்காக அங்கு புல்டோசர்கள், கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள், அங்கு மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்து காவல்துறைக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

சீனாவின் ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் மசூதி வளாகத்தில் குவிந்த முஸ்லிம்கள், காவல்துறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள், ராணுவ வீரர்கள் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். தங்கள் கைகளில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் வீசி எறிந்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களுடன் காவல்துறையும், ராணுவ அதிகாரிகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களது சமாதானத்தை முஸ்லிம்கள் ஏற்கவில்லை.  அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு எதிராகத் தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்தினரும், காவல்துறையினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.