மும்பை:
டற்படையை சேர்ந்த இரண்டு ரோந்து படகுகள் கடற்படை தளம் அருகே  தீ பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடற்படை படகுகள் தீபிடித்து எரிந்த காட்சி
         கடற்படை படகுகள் கடலுக்குள்பி தீபிடித்து எரிந்த காட்சி

       

              இந்திய கடற்படையை சேர்ந்த அந்த படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தன. எதிர்பாராதவிதமாக ஒரு படகில் திடீரென தீ பிடித்ததால், தீயை அணைக்க அடுத்த படகில் இருந்து  தண்ணீரை பாய்ச்சியபோது அந்த படகுக்கும் தீ பரவியது. இன்று காலை 5 மணி முதல் 7 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தீயில் இரண்டு படகுகளும் எரிந்து கடலுக்குள் மூழ்கியதாகவும் இந்திய கடற்படை  தகவல்கள் கூறுகின்றன..

      கடலில் மூழ்கிய 2  படகுகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் மும்பை கடற்படைகடற்படை அதிகாரிகள் கூறினர்.