ஷார்ஜா: மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில், ஐதராபாத்தின் வெற்றிக்கு 150 ரன்களை நிர்ணயம் செய்துள்ளது மும்பை அணி.

டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது ஐதராபாத். இன்று மும்பையின் கேப்டனாக மீண்டும் களமிறங்கினார் ரோகித் ஷர்மா.

துவக்க வீரரான அவர் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். டி காக் 13 பந்துகளில் 25 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 36 ரன்களும், இஷான் கிஷான் 33 ரன்களும் அடித்தனர்.

பின்வரிசையில் இறங்கிய பொல்லார்டு 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்களை அடித்து, ஸ்கோர் எண்ணிக்கை சற்று உயர உதவினார்.

இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

ஐதராபாத் சார்பில், ஷபாஸ் நதீம் 4 ஓவர்களை வீசி, 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டுமெனில், இப்போட்டியில் ஐதராபாத் அணி பெரிய வெற்றியை ஈட்ட வேண்டும்.