இரு பிரிவினரிடையே சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தி சினிமா உலகை சேர்ந்த சையது என்பவர் பந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கங்கனா மீதும், ரங்கோலி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பந்த்ரா போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கங்கனா சகோதரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள பந்த்ரா போலீசார், இருவரும் நேரில் ஆஜராகுமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர்.

குடும்ப திருமணத்தில் பங்கேற்க இருப்பதால், நேரில் ஆஜராக இயலாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கங்கனாவும், ரங்கோலியும் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பந்த்ரா போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

– பா. பாரதி