மும்பை

மும்பை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

குல் அச்ரா என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

முமை உயர்நீதிமன்றத்தில் ராகேஷ் ஜெயின் இந்த விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி,

“அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும்”

என்று தெரிவித்தார்.

அத்துடன் அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.