சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டனும்,   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியின் தாய், தந்தைக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள், ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,023 பேர் பலியானதுடன்  நாடு முழுவதும் 2,95,041 பேருக்கு புதிதாக  தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 1,56,16,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக கொரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்து  சென்ற நிலையில், 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலையில்  21,57,538 பேர் கரோனாவுக்காக சிகிச்சையில் உள்ளனர்.

இந்திய நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியான நிலையில் ராஞ்சியின் பரியாது சாலையில் உள்ள பிளஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் இருவரும் சாதாரணமாக இருக்கிறார்கள், இருவரது நுரையீரலும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆக்சிஜன் அளவு நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.