மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன் ராம்பிரகாஷ் பதவ்ரியா மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பில் இருந்த போது திடீரென மொபைல் போன் வெடித்தது.

சந்தகுய்யா கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரகாஷ் பதவ்ரியா-வின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக ஆன்லைன் வகுப்பில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதிக சத்தத்துடன் வெடித்ததைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 15 வயது சிறுவனான ராம்பிரகாஷ் பதவ்ரியா-வின் தாடை பகுதியில் பலத்த அடிபட்டதை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சட்னா மாவட்ட மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்கு ஜபல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அம்மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.