சிதீ: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 39 பேர் பலியாகியுள்ளனர்.

சிதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே இன்று காலை 7.30 மணியளவில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்துள்ளது. முதல் கட்டமாக கரையிலிருந்த 7 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 39 பேரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத் துறை அமைச்சர் துளசிராம் சிலாவத் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக கிரேன்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.