பிரயாக்ராஜ்
மகா கும்பமேளாவில் 7000க்கும் அதிகமான பெண்கள் துறவறம் எடுத்துக் கொண்டுள்ள்னர்.
கடந்த 13-ந்தேதி உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக வரும் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்
இதுவரை இந்த கும்பமேளா நிகழ்வில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டுள்ளனர். இந்த கும்பமேளா நிகழ்வின் போது ஏராளமான இளம் பெண்கள் துறவரம் மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துக் கொண்டுள்ளனர் சந்நியாச தீட்சை எடுத்து துறவறம் மேற்கொண்ட பெண்கள் சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். துறவறம் பூண்ட பெண்கள் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள்”
என்று தெரிவித்துள்ளது.