புதுடெல்லி: 
நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதை  விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படாததால்,  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.