டில்லி:

பிரதமர் மோடி பிப்ரவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் பாலஸ்தீனம் செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்கிறார். துபாயில் நடைபெறும் 6-வது உலக மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நகரில் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். பாலஸ்தீன நாடுக்கு இந்திய பிரதமர் முதன் முறையாக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.