டில்லி

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜிவ் காந்திக்கு ட்விட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜிவ் காந்தி இன்று தனது 47ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.  தற்போது இத்தாலியின் தனது பாட்டியை காண சென்றுள்ளார்.   அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனைத்து ஊடகங்கள் வழியாக குவிந்து வருகின்றன.

அவரது பிறந்த தினத்தை உத்தரப் பிரதேசத்தில் சங்கல்ப் திவஸ் என்னும் பெயரில் காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.  ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தும், அரசு மருத்தவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் அளித்தும் வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ராகுலுக்கு டிவிட்டர் மூலம் “காங்கிரஸ் துணைத்தலைவர் திரு ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  அவருடைய நீண்ட ஆயுளுக்கும், நல்ல உடல்நலத்துக்கும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.