டில்லி:

உலக தலைவர்களை போல் நம்நாட்டு விவசாயிகளையும் பிரதமர் மோடி கட்டி தழுவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி வெளிநாடு சென்றாலும், பிற நாட்டு தலைவர்கள் இந்தியா வந்தாலும் அவர்களை கட்டித்தழுவி வரவேற்பு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவையும் இதேபோல் கட்டித்தழுவி வரவேற்றார்.

இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ ஒவ்வொரு முறையும் பிற நாட்டு தலைவர்களை கட்டிப்பிடித்து பிரதமர் மோடி பாசத்தை வெளிகாட்டுகிறார். நமது நாட்டு விவசாயிகள், நாட்டை காக்கும் ஜவான்களையும் மோடி கட்டித்தழுவி பாசத்தை காட்ட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.