டெல்லி:

டெல்லி சாஸ்திரி பவனில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்துகுறித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார்.

அதில், மோடி, நீங்கள் இப்படி ஆவணங்களை கொளுத்துவது உங்களை கண்டிப்பாக காப்பாற்றாது. உங்களுக்கான தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவன் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய ஆவணங்கள் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில்,  ஏற்பட்ட திடீர் தீ விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், ராகுல்காந்தி பதிவிட்டுள்ள டிவிட் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.