டெல்லி

பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சோப கிருது ஆண்டு விடைபெற்று ‘குரோதி’ புத்தாண்டு இன்று பிறந்துள்ளது.

பல அரசியல் தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவ்வகையில், பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி தனது எக்ஸ் தளத்தில் ,

“தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி,வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்” 

என்று பதிவிட்டுள்ளார்.