டெல்லி

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில்  சிக்கி பலியான 18 பேருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்,

டெல்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரவு 9:15 மணிக்கு அதிக அளவில் பயணிகள் மகா கும்பமேளா செல்வதற்காக திரண்டதால் பிளாட்பார்ம்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. ரயிலில் ஏற பயணிகள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகி பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே அமைச்சர் இந்த விபத்து குறித்து உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட துயர சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா ,

“உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். அதேபோல, டெல்லி துணை நிலை ஆளுநரிடமும் பேசியிருக்கிறேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய அறிவுறுத்தியுள்ளேன்”

என்று தெரிவித்துள்ளார்