டில்லி:

நாடு முழுவதும் தற்போது உபயோகப்படுத்தப்படும் மொபைல் எண்கள் அனைத்தும் 13 இலக்கமாக மாற மத்திய தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது.

தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வரும் மொபைல் எண்கள் அனைத்தும் 10 இலக்கங்களில் உள்ளது. இதை 13 இலக்கமாக மாற்ற தொலைத்தொடர்பு துறை முடிவு செய்து, அதுகுறித்து அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, இதற்கான பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் அக்டோபர் மாதம் முதல் மொபைல் எண்கள் மாற்றும் படி தொடங்கப்பட்டு,  டிசம்பர் 31ந்தேதிக்குள் அனைத்து மொபைல் எண்களும் 13 இலக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.