நூ

ரியானாவில் நூ உள்ளிட்ட பல இடங்களில் மொபைல் இணையச் சேவைக்கான தடை ஆகஸ்ட் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில மர்ம நபர்கள் ஊர்வலம் மீது கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

இந்த கலவரத்தின்போது வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. அரியானா முதல்வர் மனோகர் லால் இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

வன்முறை காரணமாக நூ மற்றும் குரு கிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.  தற்போது அரியானா அரசு, நூ மற்றும் பல்வால் மாவட்டங்களில் மொபைல் இணையச் சேவைகளுக்கான தடையை ஆகஸ்ட் 8 வரை நீட்டித்துள்ளது.

இந்த தடை நூ மாவட்டத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.