சென்னை

க்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நாளை இணையம் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் இங்கு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவு இட்டுள்ளது.

இந்த தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசு ஏற்கனவே ஆய்வு நடத்தி வருகிறது.  விரைவில் இங்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கும் எனக் கூறப்படுகிறது.   இதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.  இன்று திமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நாளை காலை 11 மணிக்கு இணையம் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.  இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.  இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.