அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தியது.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இன்று காலை 11:16 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பை நகருக்கு தென்கிழக்கே 29 கிலோ மீட்டர் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு ரிக்டரில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. அதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.

அசாமில், கர்பி அங்லாங் அருகே 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. காலை 6:02 மணிக்கு 3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அலிகரை தாக்கியது. வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.