புதுக்கோட்டை

மேலும் 50 அரசுப் பள்ளிகளைப் பசுமைப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை அருகே உள்ள முல்லூரில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் தனது பேட்டியில்

“இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 50 அரசுப் பள்ளிகளைப் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது.

விரைவில் மாணவர்களுக்கு உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழகத்தில் 53 இடங்களில் குப்பைக்கிடங்குகள் பயோமைனிங் மூலம் அகற்றப்பட்டு உயிர்நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.