சென்னை

மேலும் ஒரு மாதத்துக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் இந்த முகாம்கள் மூலம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.  தற்போது மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் நீட்டிக்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.