சென்னை: ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 ஐபிஎஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் பல்வேறு தகவல்கள், பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக, சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை மேற்கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. ‘

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘ நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டது போல 5 பேரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசியல் லாபத்திற்காக கூறப்படவில்லை. ஆணையம் கூறுவது அனைத்தும் ஆணித்தனமான உண்மை. ‘ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில் , ‘ சட்டமன்றத்தில் இதனை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது குறித்து தமிழக உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்படும்’ என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்ட்டார்.

அதுபோல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் 3 தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.