திமுக தலைவர் கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி  இன்று தனது 95ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அகில இந்திய அளவில்  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உட்பட பல்வேறு

இந்த நிலையில் பிறந்தநாள் காணும் திமுக தலைவர் கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் குறித்து கட்சி ரீதியாக கருத்து கூற முடியாது. ஆனால் அவர்  நூறாண்டு வாழ வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாளை முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக திமுக அறிவித்துள்ளதையும் வரவேற்றார். மேலும், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று மக்கள் மத்தியில் தவறான கருத்தை திமுகவினர் பரப்புவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.