சென்னை

ளுநர் ஆர் என் ரவி பட்டியலின ஊராட்சி தலைவர் பதவி ஏற்பு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் துரைமுருகன் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாகத் தெரிவித்து இதற்குத் தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு, குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல என்றும்,அரசியல் பேச வேண்டும் என்றால், அரசியல் தலைவராக மாறி தாராளமாக ஆளுநர் தன் கருத்தைத் தெரிவிக்கலாம்.  அந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள். 

உயர்நீதிமன்ற உத்தரவினை படிக்காமல் பாஜக செய்தி தொடர்பாளர் போல ஆளுநர் திட்டமிட்டு தமிழக அரசின் மீது அவதூறு பரப்புவதா?, அவருடைய பதவிக்கு சமூக நீதியை குலைக்கும் வகையில் பரப்புரை செய்வது அழகு அல்ல. தற்போது நாயக்கனேரி ஊராட்சி மன்றம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மட்டுமே அங்குப் பதவியேற்பு நடைபெறாமல் உள்ளது,”

என்று தெரிவித்துள்ளார்.