பிரபலமான இயங்குதள (Operating systems) நிறுவனமான மைக்ரோசாப்ட், சர்பேஸ் என்ற பெயரில் கணினிகளை உருவாக்கி வெளியிட்டுவருகிறது. சமீப காலமாகவே மடிக்கும் வசதியுடன் கூடிய கணினிகளைஉருவாக்கி வருவதாக தொழில்நுட்பத்துறையில் பேச்சு இருந்தது. இந்நிலையில் மடிக்கும் வசதியுள்ள கணினிகளை உருவாக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மடிக்கும் வசதியுள்ள கணினிகளை  சாம்சுங் நிறுவனமும், வாவே நிறுவனமும் தயாரித்துள்ளது. இவ்வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் சேர உள்ளது.

சமீபத்தில் வந்த போர்ப்ஸ் நிறுவனத்தின்  அறிக்கையின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 அடிப்படையிலான மடிக்கும் வசதியுள்ள கணினிகளை உருவாக்கி உள்ளதாகவும் இந்த ஆண்டிற்கு வெளியிடப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது

மடிக்கும் வசதியுள்ள கணினி யானது இன்டெல் லேக்பீல்டு சிப்ட் அடிப்படையில் மைக்ரோசாப்ட் ன் சர்பேஸ் வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது இந்த கணினியில் ஆன்டிராய்டு செயலிகளுக்கும், ஆப்பிஸ் நிறுவனத்தின் ஐகிளவுட் சேவைகளைக்கும் ஒத்திசைவு வழங்கப்பட்டுள்ளதாகவும் , இந்த கணினி 5ம் தலை முறை இணையம் எனப்படும் 5 ஜி உடன் வர உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த கணினியின் திரை அளவு 9 இஞ்ச்

இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே லெனோவா நிறுவனம் உலகில் முதல் மடிக்கும் வசதியுள்ள கணினியை உருவாக்கி அது 2020ம் ஆண்டு ப8துமக்கள் பயன்பாட்டு வரும் என்றும் அறிவித்து உள்ளது. அந்நத நிறுவனத்தின் திரை அளவுனு 13.3 இஞ்ச் ஆக வும்,  OLED 2K LG சிறப்பம்சத்துடனும் வர உள்ளது

=செல்வமுரளி