சென்னை: லண்டனில் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில், கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மா.சு. கலந்துகொண்டு கருவிகளை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சத்தபோது,  கோடை காலத்தில் பல்வேறு சுகாதார அறிவிப்புகள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றவர், லண்டனில் உருமாறிய கொரோனா வந்துள்ளது. அதனால்,  நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றவர், தமிழ்நாட்டை பொறுத்த வரை, 92  சதவீதம் முதல் தவணையும், இரண்டாம் தவணை 76 சதவீதமும் போடப்பட்டு உள்ளது என்றும், தடுப்பூசி முகாம்களில்,  மக்கள் குறைந்த அளவே தடுப்பூசி போடுகின்றனர். இன்னும் 3 அல்லது 4 வாரங்கள் பொறுத்து, வேறு வழிகளில் தடுப்பூசி போடுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.