டெல் அவிவ்

ஸ்ரேலில் மேகாலயா மாநில தேசிய மக்கல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது குடும்பத்துடன் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. சுமார் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி(என்.பி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் வான்வெய்ராய் கார்லுக்கி, இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  பெத்லகேம் நகருக்கு  மேகாலயாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வான்வெய்ராய் கார்லுக்கி., அவரது மனைவி, மகள் உள்பட மொத்தம் 24 புனித பயணம் மேற்கொண்ட போது போர் மூண்டுள்ளது.