சென்னை:
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வரும் 22ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கும். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசியை பொது மக்கள் செலுத்தி கொள்ளலாம்.
தொடர்ந்து பேசிய அவர், நந்தம்பாக்கம் கோவிட் சிகிச்சை மையத்தில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன.தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த படுக்கைகளில், போலீசார், அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு என 350 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel