ந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் சிங், தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தான், சுஷாந்த் ராஜ்புத்தை, தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்த் தந்தை கே.கே.சிங், புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ரியா சார்பில் வாதாடும் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியின், ஜுனியர் ஆவார்.

இந்தி நட்சத்திரங்களின், ஆஸ்தான வழக்கறிஞர் சதீஷ். கடந்த 2002 ஆம் ஆண்டு சாலையில் தூங்கியவர்கள் மீது நடிகர் சல்மான்கான் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்தார்.சிலர் காயம் அடைந்தனர். அந்த வழக்கில், ஆஜரானவர், சதீஷ்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் சஞ்சய் தத் சார்பில் ஆஜராகி, அந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க உதவியவரும் சதீஷ் தான்.

இப்போது ரியா சார்பில் ஆஜராகும் சதீஷின் ஒரு நாள், பீஸ், 10 லட்சம் ரூபாயாகும்.

தப்பு செய்யவில்லை என கூறிவரும் ரியா சக்ரவர்த்தி, எதற்காக, இத்தனை ’காஸ்ட்லியான’ வழக்கறிஞரை வைத்து வாதாட வேண்டும்?’’என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-பா.பாரதி.