டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட இந்திய பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12ஆண்டுகள் ஆகும் என இந்திய ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2035ம் ஆண்டுதான் மீளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் 2022ம் ஆண்டுக்கான பணம் மற்றும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயம் மற்றும் நிதி தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “புத்துயிர் அளிப்பது மற்றும் புனரமைத்தல்”  என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கோவிட் 19 இடையூறுகளால் ஏற்படும் “இழப்பைக் கடக்க” இந்தியப் பொருளாதாரம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆகலாம் என்று கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தியில் இந்தியா ரூ. 50 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்புகளை 2034-35ல்  சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அறிக்கை கூறுகிறது.

“தனிப்பட்ட ஆண்டுகளுக்கான உற்பத்தி இழப்புகள் 2020-21, 2021-22 மற்றும் 2022-23 இல் முறையே ரூ.19.1 லட்சம் கோடி, ரூ.17.1 லட்சம் கோடி மற்றும் ரூ.16.4 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய நேரத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் முடங்கியது. இதனால், இந்தியாவின் பொருளாதாரம்,   மோசமாகப் பாதிக்கப்பட்டு மைனஸில் சென்றது. சுமார் ஓராண்டு காலம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இந்திய பொருளாதாரம், கடந்த நிதியாண்டிலிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. இருந்தாலும்  முழுமையாக மீண்டு வர இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என எதிர்பார்ப்பதாக ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய நீடித்த மீட்சியை வளர்ப்பது மற்றும் நடுத்தர காலத்தில் வளர்ச்சியை உயர்த்துவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், பெருந்தொற்றுநோயால் ஏற்பட்ட  கட்டமைப்பு மாற்றங்கள் நடுத்தர காலத்தில் வளர்ச்சிப் பாதையை மாற்றும். இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதம் அடுத்த ஆண்டில் வளர்ச்சி அடையும் என்பது அணுமானத்தின் அடிப்படையிலான வளர்ச்சிஅறிக்கைதான். ஆனால், சர்வதேச நிதியம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையில், 2024ம் நிதியாண்டில் 6.9சதவீதம்தான் வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

நிதியின் அடிப்படையில் கணக்கிட்டால், 2021ம் நிதியாண்டில் இந்தியாவுக்கு கொரோனாவால் ரூ.19.10 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  2022ம் ஆண்டில் ரூ.17.10 லட்சம் கோடியும், 2023ம் ஆண்டில் ரூ.16.40 லட்சம் கோடியும் இழப்பு அல்லது உற்பத்தி இழப்பு ஏற்படும். 2022ம் ஆண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி மதிப்பு ரூ.147.54 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மைனஸ் 6.6 சதவீதம் அளவுக்கு சரிந்தது. 2021-22ம் ஆண்டில் 8.9 சதவீதம் வளர்ச்சியும், 2022-23ம் ஆண்டில் 7.2 சதவீதமும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் முழுமையாக 2034-35ம் நிதியாண்டில்தான் மீளும் என்று கணக்கிடுகிறோம்.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் இந்தியா பொருளாதார தேக்கநிலையிலிருந்து மீண்டுவருவதை கடுமையாகப் பாதி்த்துவிட்டது. பொருட்களின் விலை கடும் உயர்வு ,சர்வதேச பொருளாதார வளர்ச்சிக் குறைவு, சர்வதேச அளவில் நிதிநெருக்கடி ஆகியவை ஏற்பட்டுள்ளன. இது இந்தியா வேகமாக மீண்டுவருவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது

2024ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 6.3 சதவீதம்என்றுதான் மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் 2024ம் நிதி யாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், கொரனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டுவர நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.