பஞ்சாப்,

டுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி கடந்த வாரம் இந்திய தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது.

இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையில் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிக்க  கடும் முயற்சி எடுத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியுன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார்.

இந்நிகழ்சியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மன்மோகன்சிங் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கடந்த பத்தாண்டு களாக ஆட்சி செய்த அகாலி தளம்-பா.ஜ.க. அரசின் நிர்வாக சீர்கேடுகள் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு 2,500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.