மானூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மேலபிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அடிக்கடி மது குடித்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நாராயணன் நேற்று விஷம் குடித்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.