கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி இன்று மதியம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

நந்திகிராம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுவேந்துஅதிகாரி, தற்போது பாஜக சார்பில் அங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மம்தா பானர்ஜி அங்கு போட்டியிடுகிறார்.

இதையொட்டி, அங்கு இன்று மதியம் மம்தா பானர்ஜி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

முன்னதாக இன்று காலை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய மம்தா நந்திகிராமுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தபோது, அந்த பகுதிமக்கள் அவருக்கு ‘கெலா ஹோப்’ கோஷங்களுடன் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து நடந்துசென்று, தனதுவேட்புமனுவை, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.