கொல்கத்தா

திருணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.   கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 20000க்கும் மேற்பட்ட மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10.94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜிக்குச் சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி ஆனது.  அவர் கொல்கத்தாவில் உள்ள மெடிகல் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில்; அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று ஆஷிம் பானர்ஜி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார்/   அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ஆஷிம் பானர்ஜியின் உடலுக்கு கொரோனா கால வழிகாட்டு நெறி முறைகளின்படி இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு, “உங்கள் சகோதரர் அகால மரணத்துக்கு எனது இதயபூர்வ இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவருடைய நினைவு என்றும் உங்களுடனும் அவருடன் உயிர் நட்பு வைத்திருந்தவர்களிடமும் என்றும் உயிர் வாழும்”என இரங்கலைத் தெரிவித்துள்ளார்