லியாசாக்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் என விமர்சித்த்ள்ளார்.

 

நேற்று மேற்கு வங்க மாநிலம் கலியாசாக் பகுதியில் நடந்த திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் கூட்டம் நடந்தது..  இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

மம்தா தனது உரையில்,

”மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச விரும்பினோம். அதைக் காங்கிரஸ் கட்சி ஏற்காமல் மார்க்சிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இவ்விரு கட்சிகளும் பா.ஜனதாவுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றன.

இரு கட்சிகளும் பா.ஜனதாவின் குரலிலேயே பேசுகின்றன. காங்கிரசுக்கோ, மார்க்சிஸ்ட் கட்சிக்கோ ஓட்டு போட்டால், அது பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளில் பிளவை உண்டாக்கி, இறுதியில் பிரதமர் மோடிக்கு சாதகமாகி விடும். காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் பா.ஜனதாவின் இரு கண்கள்.

மேற்கு வங்காளத்தில் ‘இந்தியா’ கூட்டணி இல்லை. வேறு மாநிலங்களில்தான் அக்கூட்டணி இருக்கிறது. இங்கு மோடி அரசுக்கு எதிரான போரை நாங்கள் தனியாகவே நடத்துவோம். தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். ‘இந்தியா’ என்ற பெயரை நான்தான் வைத்தேன்.”

என்று கூறியுள்ளார்.