டில்லி

பெங்களூருவில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதித்து வருகின்றன.

கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இமாசலப் பிரதேசத்தில்  கனமழை பெய்து வருகின்றது.  இதன் காரணமாக இந்த கூட்டம் கர்நாடகாவில் பெங்களூர் நகரில் ஜூலை 17,18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இம்முறை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டம் தொடர்பாகக் காங்கிரஸ்  கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,

”பெங்களூரு கூட்டத்துக்கு ஒத்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்துள்ளோம். வரும் ஜூலை 17-ந் தேதி மாலை 6 மணிக்குக் கூட்டம் தொடங்கி பின்னர் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  இதைத் தொடர்ந்து 18-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.  

என்று தெரிவித்துள்ளார்.