மலேசியா: 
லேசியா ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிலாங்கூரில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வெள்ளம் பாதித்த ஏழு மாநிலங்களில் வசித்து வந்த 64,000 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கால், மலேசியா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பஹாங் மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசித்த  34,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து  24,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர் என்று கூறினார்.