மிராரோடு

மைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிர காவல்துறையினர் சனாதனம்  குறித்த பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சனாதன தர்மம்’ குறித்துப் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையொட்டி டில்லி உள்ளிட்ட சில மாநில காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிராரோடு காவல்துறையிடம் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் புண்படுத்தி இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மிராரோடு காவல்துறையினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, வேண்டும் என்றே மத நம்பிக்கைகளை அவமதித்து உணர்வுகளைத் தூண்டுதல், இரு பிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.