மும்பை:

த்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான், தனது பதவியை  ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

புதிய மசோதா, வகுப்புவாதத்துடன், அரசியலமைப்பிற்கு முரணாக  இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியஅரசு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாப்படி,  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளில் மத துன்புறுத்தலால் இந்தியா வந்த இந்து, புத்த, சமண, சீக்கிய, கிறிஸ்வத, பார்சி உள்ளிட்ட 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும், ஆனால், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், ஓரிரு நாளில் குடியரசுத் தலைவர் அனுமதி கிடைத்தவுடன் சட்டமாக்கப்படும்.

இந்த நிலையில்,  குடியுரிமை மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு வருகிறது. அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகி உள்ளது.

இந்த நிலையில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ராஜினாமா செய்வதாக மும்பைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,  குடியுரிமை திருத்த மசோதா வகுப்புவாதத்துடனும் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாகவும், இது சட்டத்தை மீறிய செயல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் இனிமேல் எந்த அரசுப் பணியையும் தொடரப்போவது இல்லை, தனது பதவியை ராஜினாமா செய்தவாகவும்  அறிவித்துள்ளார்.

மேலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஆதரவாக ஜனநாயக முறையில் இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சகிப்புத்தன்மையுடனும், மதச்சார்பின்மையுடனும் நீதியுடன் ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்து மக்கள் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்றும் ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.