மும்பை: பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை 25 விழுக்காடு குறைக்கலாம் என்று மகாராஷ்டிரா கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழு தெரிவித்துள்ளது. மாநில அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்  மார்ச் 16ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்கள் ஆகும் நிலையில், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.