மும்பை: அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க மகாராஷ்டிரா மாநிலத்தில்’ சக்தி சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சக்தி சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
நாடு முழுவதும பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை (Sexual abuse) மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவகின்றன. இதை தடுக்க பல மாநிலஅரசுகள் பல்வேறு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதுபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு (Uddhav Thackeray) பாலியல் கொடுமைகளை தடுக்க புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி சக்தி சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தை மகாராஷ்டிரா அரசு (Maharashtra Govt) மாநிலத்தில் உருவாக்கி உள்ளது. அதில் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வர இருக்கும் குளிர்கால சட்டமன்றத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சக்தி சட்டம் (Shakti Act)
சக்தி சட்ட (Shakti Act) மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது,
இந்த மசோதாவில் பாலியல் குற்றச்சாட்டு புகாரில், சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில், ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதாவது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Plastic surgery) மற்றும் முக புனரமைப்புக்காக இந்த தொகை வழங்கப்படும் என்றும், குற்றவாளியிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழ் (Shakti Act), பாலியல் பலாத்கார வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் என்றும், 15 நாட்களில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சோதனை அதிகபட்சம் 30 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் என்றவர், ‘சக்தி சட்டம்’ என்று அழைக்கப்படும். இந்த செயல் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதை நிரூபிக்கும் என்று அனில் தேஷ்முக் கூறினார்.
இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர், இது ஒரு வரலாற்று முடிவு என்றும், இதன் காரணமாக, மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்முறை செய்பவர்களிடையே அச்சத்தை அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலசட்டமன்றத்தின் இரண்டு நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் , ல் டிசம்பர் 14 முதல் தொடங் உள்ளதாகவும், இந்த அமர்வில் ‘Shakti Act’ மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, ட்டப்பேரவையின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது. பின்னர், அது ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டமாக அமலுக்கு வருகிறது.
[youtube-feed feed=1]