மும்பை: ஒரு ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றுவது தொடர்பாக, மத்திய அரசுக்கும், மராட்டிய அரசுக்கு முட்டல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியின் காவல்துறை ஆணையராக நியமிக்க, தற்போதைய மராட்டிய மாநில டிஜிபி சுபோத் ஜெய்ஸ்வாலை நியமிக்கும் விஷயத்தில்தான் இந்த மோதல் நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

டெல்லி மாநில காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதாகும். தற்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்ய பட்நாயக் இருந்து வருகிறார்.

இவர் விரைவில் ஓய்வுபெற உள்ளதால், அந்த இடத்திற்கு சுபோத் ஜெய்ஸ்வாலை கொண்டுவர வேண்டுமென்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விருப்பம்.

எனவே, அவரை மராட்டிய மாநில அரசின் பணியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மத்திய அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டாலும், அதை மாநில அரசு நிராகரித்துவிட்டதுதான் இப்போதைய மோதல்.