துரை

துரை உயர்நீதிமன்றம் விநாயகர் சிலைகளை ரசாயன கலப்பின்றி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.

அந்த விநாயகர் சிலைகளை 3-ம் நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். வரும் 18 ஆம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரசாயனம் கலப்பில்லா விநாயகர் சிலைகளை மட்டுமே விற்பனை செய்து கரைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி விநாயகர் சிலைகள் ரசாயனக் கலப்பின்றி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.