தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது.

இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பிய பொறுப்பு தலைமை நீதிபதி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறினார்.

ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே இந்த தடை சட்டம்.

மக்கள் நலன் தான் மிக முக்கியம், மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு தரப்பு வாதம்.

இச்சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு ஒத்திவைத்தது.